søndag 13. april 2014

வானம்பாடிகள் 2014'ன் இறுதிப்போட்டி விபரம்...

தமிழ்முரசம் வானொலியின் "பொன் மாலைப்பொழுது 2014"
நேற்று 12.04.2014 அன்று
அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் முன்நிலையில்
மிகவும் சிறப்பாக நடைபெற்றது


மாலை 5 மணிக்கு வரவேற்பு உரையுடன் ஆரம்பித்த போன் மாலைப்பொழுது தொடர்ந்து மங்கள விளக்கேற்றி, அமைதிவணக்கம்செலுத்தி நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது

வரவேற்பு நடனம், சிறப்புரை, நடனம், நாடகம், தாயகப்பாடல் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள்,
அரங்கத்தை குலுங்கக் குலுங்க சிரிக்கவைத்த வடிவேலு பாலாஜியின் நகைச்சுவைத் தொகுப்பு
,
இளம்செல்லக்குயில்
செல்லக்குயில்வானம்பாடிகளின் இறுதிச்சுற்றுப் போட்டிகள் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து
2013 ம் ஆண்டு வெற்றிபெற்ற பாடகர்களின் சிறப்பு பாடல்களும், அதனைத்தொடர்ந்து இளம்செல்லக்குயில்செல்லக்குயில்வானம்பாடிகள் 2014 இறுதிச்சுற்றில் வெற்றிபெற்ற  பாடகர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.


அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் ஆதரவுடன், பங்களிப்புடன் தயாகப்பாடல் பாடி "பொன் மாலைப்பொழுது 2014"  இனிதே நிறைவுபெற்றது.

இறுதிப்போட்டியில் அனைவரும் மிக அருமையாக தங்கள் திறமைகளை வெளிக்காட்டியிருந்தார்கள் இறுதிப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதுடன்
வானம்பாடிகள் 2014 பாடல் போட்டியில் வெற்றி பெற்று
வானம்பாடிகள் 2014” என்ற தலைப்பை தன்வசப்படுத்திய
சகானா சாதானந்தன் அவர்களுக்கு எமது சிறப்பு
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.



Ingen kommentarer:

Legg inn en kommentar